ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை-வாகன ஓட்டிகள் பீதி
2022-05-10@ 12:48:05

பென்னாகரம் : ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி, கர்நாடக-தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், போக்கு காட்டி விட்டு, யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 10க்கும் மேற்பட்ட யானைகள், ஒகேனக்கல் வனப்பகுதியில் நுழைந்தது. இந்நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைந்துள்ள முண்டச்சிபள்ளம் பகுதியில், ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. காலை, மாலை நேரங்களில் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை, இந்த ஒற்றை யானை கடந்து செல்வதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் வருவதை தடுக்க, வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும். யானைகளுக்கு உணவாக கரும்பு சோகை, தென்னை மட்டை ஆகியவற்றை அதிக அளவில் போட வேண்டும். யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்,’ என்றனர்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!