தாமஸ் கோப்பை பேட்மின்டன் நாக்-அவுட் சுற்றில் இந்தியா
2022-05-10@ 00:08:11

பாங்காக்: தாமஸ் கோப்பை பேட்மின்டன் தொடரின் நாக்-அவுட் சுற்றில் விளையாட இந்திய ஆண்கள் அணி தகுதி பெற்றுள்ளது. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா முதல் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. அடுத்து கனடா அணியுடன் நேற்று மோதிய இந்தியா, இப்போட்டியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என வெற்றியை வசப்படுத்தியது.
ஒற்றையர் ஆட்டத்தில் கனடாவின் பிரையன் யாங்கை எதிர்கொண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் செட்டை 20-22 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி 21-11, 21-15 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி மற்றும் கிரிஷ்ண பிரசாத் - விஷ்ணுவர்தன் ஜோடிகளும், ஒற்றையர் ஆட்டங்களில் எச்.எஸ்.பிரணாய், பிரியன்ஷு ரஜாவத் ஆகியோரும் வெற்றியைப் பதிவு செய்தனர்.
தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்திய இந்தியா சி பிரிவில் முதல் 2 இடங்களுக்குள் வருவதை உறுதி செய்ததால், நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தில் நாளை சீன தைபே அணியின் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது.
மேலும் செய்திகள்
ஜிம்பாப்வேயுடன் முதல் ஒருநாள் போட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; தவான், கில் அசத்தல்
நியூசி.யை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போராடி தோற்றார் நடால்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் இகா ஸ்வியாடெக்; மேடிசன் கீஸ் வெற்றி: நடால் அதிர்ச்சி தோல்வி
ஆப்கனுக்கு எதிரான 5வது டி20; அயர்லாந்து அபார வெற்றி: தொடரை 3-2 என கைப்பற்றியது
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...