கேரள அரசின் ஓராண்டு நிறைவையொட்டி இடுக்கி அணையை பார்வையிட அனுமதி: படகு சவாரிக்கும் ஏற்பாடு
2022-05-09@ 18:38:40

மூணாறு: கேரள அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, இடுக்கி அணையை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட இன்று முதல் மே 31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை குறவன் - குறத்தி எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்டதாகும். ஆசியாவில் இருக்கும் உயரமான வளைவு அணைகளுள் இது 2வது மிகப்பெரிய அணையாகும். கடந்த சில நாட்களாக பெய்த கோடைமழை காரணமாக, இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் கேரள அரசின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, இன்று முதல் மே 31ம் தேதி வரை இடுக்கி அணையை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் மலையேற்றம் மற்றும் இடுக்கி அணை பகுதியில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை பெரியவர்களுக்கு ரூ.40 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.20, அணையில் படகு சவாரி செய்ய 8 பேருக்கு ரூ.600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
12 அடி அகலம், 32 அடி நீள தேசிய கொடி உருவாக்கி மழலையர் பள்ளி குழந்தைகள் சாதனை
விடுதியில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்: ஊத்தங்கரையில் போலீஸ் குவிப்பு
திருத்தணி அருகே வீடுகள் இடிப்பை கண்டித்து பொது மக்கள் மறியல்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சமரசம்
உத்திரமேரூரில் ரூ.21 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்; சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
இலவச கால்நடை மருத்துவமுகாம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!