டெல்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் வந்தன: எதிர்ப்பை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தம்..!
2022-05-09@ 15:48:32

டெல்லி: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று நாடே திரும்பி பார்த்த ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் வடக்கு ஜஹாங்கீர் புரியில் இது போன்று ஆகிக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி புல்டோசர்கள் கொண்டு வரப்பட்ட போது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று சம்பவ இடத்திற்கு பிருந்தா காரத் முறையிட்டார். அப்போது இஸ்லாமியர்களை குறிவைத்து பாஜக ஆளும் வடக்கு டெல்லியில் மாநகர நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதேபோன்று தற்போது தெற்கு டெல்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர்; ஒரு கடை முன்பு இருந்த இரும்பு கம்பங்களை தானே முன்னின்று அகற்றி விட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தெற்கு டெல்லி நிர்வாகமும் பாஜகவும் சூழ்ச்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். இதனிடையே ஜஹாங்கீர் புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஷாகின் பாக்கில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு மறுத்துவிட்டது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே எதிர்ப்பு காரணமாக ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி.. 30க்கும் மேற்பட்டோர் காயம்!!
வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!
தமிழ்நாடு- கேரள எல்லையில் வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானை: உடனடி சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
பில்கீஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்பு: குஜராத் அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்...
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனமாக்குகிறது: ஒன்றிய அரசு மீது கேசிஆர் குற்றச்சாட்டு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!