மும்பையில் ஹவாலா பேர்வழிகள், கடத்தல்காரர்கள் வீடுகளில் அதிரடி சோதனை!: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளி கைது..!!
2022-05-09@ 14:18:05

மும்பை: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர் சலீம் என்பவர் ஆவார். மும்பையில் தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளிகள் மற்றும் சில ஹவாலா மோசடி நபர்களின் வீடுகளில் நேற்று நள்ளிரவு முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். உள்துறை அமைச்சகம் எடுத்த ஆணையை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் சலீம் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
மேலும் ஹவாலா மோசடி செய்யும் நபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என 10க்கும் மேற்பட்டோரின் வீடுகளிலும் தேசிய புலனாய்வுதுறை முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அண்மையில் தாவூத் இப்ராஹிம் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவரது கூட்டாளிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கபடியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கோகோ ஆட்டமும் தொழில் முறை லீக் போட்டியாக அரங்கேற்றம்...
குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியது எஸ்.பி.ஐ: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!
75ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...
மக்களை கவர முயற்சி: வருமான வரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்தாகிறது..வரிவிலக்கு இல்லாத வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்க ஒன்றிய அரசு முடிவு..!!
இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!
சவால்களை கடந்து சாதனை படைக்கிறது; உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!