திருப்பதியில் கார் தீப்பிடித்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
2022-05-09@ 13:54:11

திருமலை : திருப்பதி கோயில் அருகே நிறுத்தியிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே அறைகள் ஒதுக்கீடு செய்யும் சி.ஆர்.ஓ. அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு டாக்சி கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சிறிதுநேரத்தில் 5 பக்தர்களை ஏற்றிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்ய அதன் டிரைவர் முயன்றார். அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்த பேட்டரியில் இருந்து புகை வந்தது.
இதைக்கண்ட பக்தர்கள் அலறியடித்தபடி தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கினர். அதற்குள் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக்கண்ட அவ்வழியாக சென்ற பக்தர்களும் அலறியடித்தபடி ஓடினர்.இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...