திருமலையில் வரும் 25ம் தேதி முதல் அனுமன் பிறந்த இடத்தில் 5 நாட்கள் ஜெயந்தி விழா
2022-05-09@ 01:00:03

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அனுமன் ஜெயந்தி ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: திருமலையில் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு அனுமன் ஜெயந்தி பெருவிழாவை பிரமாண்டமாக கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். திருமலை அடுத்த அஞ்சனாத்திரியில் உள்ள ஆகாச கங்கையில், அனுமன் பிறந்த இடமான ஜபாலி தீர்த்தம், நாதநீராஞ்சனம், எஸ்.வி.வேதப்பள்ளி ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
தர்மகிரி வேதபாடசாலையில் முழுமையான சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடத்த அந்தந்த துறை அதிகாரிகள் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அந்த நாட்களில் தேவஸ்தான தொலைக்காட்சியில் நான்கு மொழி சேனல்களில் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். இதனால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இதைப் பார்க்க முடியும். அஞ்சனாத்ரி மகிமை, இதிகாச ஹனுமத்விஜயம், யோகாஞ்சநேயம், வீராஞ்சநேயம், பக்தாஞ்சநேயம் என பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும். பொறியியல், அன்னதானம், தர்ம பிரச்சார பரிஷத், எஸ்வி வேத பள்ளி, பாதுகாப்புத்துறை, மக்கள் தொடர்புத்துறை, எஸ்விபிசி துறையினர் ஏற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
Thirumalai from the 25th Hanuman 5 days Jayanti festival திருமலை 25ம் தேதி முதல் அனுமன் 5 நாட்கள் ஜெயந்தி விழாமேலும் செய்திகள்
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு
ஆந்திராவில் உள்ள 10 தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஏலம்
இலவசம்னு சொல்றதை நிறுத்துங்கள்: கெஜ்ரிவால் ஆவேசம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!