திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையை முதன்மை செயலர் ஆய்வு
2022-05-09@ 00:45:51

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று 3340 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் அருகே நடைபெறும் தடுப்பூசி முகாமை அரசு முதன்மை செயலர் இறையன்பு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை தமிழக அரசு முதன்மை செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல், மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி டீன் அரசி ஸ்ரீவத்சன் மற்றும் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:
In Tiruvallur Government Hospital Principal Secretary Inspection திருவள்ளூரில் அரசு மருத்துவமனை முதன்மை செயலர் ஆய்வுமேலும் செய்திகள்
செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திம்மையன் பேட்டை ஊராட்சியில் கைபம்பு; இங்கே... தண்ணீர் எங்கே...? சீரமைக்க இருளர் மக்கள் வேண்டுகோள்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் வரும் அரசு பேருந்து: பயணிகள் குழப்பம்
கொலை வழக்கில் அப்ரூவராக மாற முயன்றதால் கத்தியால் சரமாரி குத்தி ரவுடி கொலை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!