துரைப்பாக்கம் பகுதியில் குடிநீர் விநியோகம் 11ம் தேதி நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு
2022-05-09@ 00:32:49

சென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் நடப்பதால் 11ம் தேதி மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பகுதி 15க்கு உட்பட்ட, ஒக்கியம் துரைப்பாக்கம், பி.டி.சி பகுதியில் நடைமேம்பாலம் அருகில் ஒஎம்ஆர் சாலையில் 500 மி.மீ. விட்டமுள்ள பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் 11ம் தேதி மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு 12ம் தேதி காலை 10 மணி முதல் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள 8144930914 என்ற எண்ணில் பெருங்குடி, கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் பகுதியினர் தொடர்பு கொள்ளலாம். மேலும் 8144930915 என்ற எண்ணில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags:
Drainage drinking water supply 11th stop Board துரைப்பாக்கம் குடிநீர் விநியோகம் 11ம் தேதி நிறுத்தம் வாரியம்மேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!