கியூபாவில் பயங்கரம் எரிவாயு கசிவால் வெடித்து சிதறிய நட்சத்திர ஓட்டல்: 25 பேர் பரிதாப பலி
2022-05-08@ 01:04:02

ஹவானா: கியூபாவில் பாரம்பரியமான நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சரகோடா என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகின்றது. மிகவும் பிரபலமான இந்த ஓட்டலில்தான், அமெரிக்க அரசு அதிகாரிகள், விஐபிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்குவது வழக்கமாகும். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. 96 அறைகளை கொண்ட ஓட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். மேலும் 74 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் அருகில் இருந்த பள்ளி கட்டிடம் சிறிதளவு சேதமடைந்தது. இதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில் ஓட்டலில் இயற்கை எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. விபத்து நடத்த சமயத்தில் ஓட்டல் ஊழியர்கள் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் மிகால் தியாஸ் கானெல், ‘‘இது வெடிகுண்டு அல்லது தாக்குதல் சம்பவம் கிடையாது. இது ஒரு சோகமான விபத்து’’ என்றார்.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!