பெரியகுளம் அருகே மின்கம்பங்களை உடனே சீரமைத்து தர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
2022-05-07@ 18:12:31

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமக்காபட்டி, அம்சாபுரம் மற்றும் மஞ்சளாறு அணை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த சூறாவளிக் காற்றால் அந்த பகுதியில் வாழைமரங்கள், தென்னைமரங்கள் முறிந்து சேதமடைந்தன. மேலும் விளை நிலங்களுக்கு செல்லும் மின்கம்பிகளில் தென்னை மரங்கள் விழுந்ததால் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் விளை நிலங்களுக்கு நீர்பாய்ச்சும் முறை தடைபட்டுள்ளது. எனவே விவசாய விளைநிலங்களில் முறிந்து விழுந்த மின்கம்பங்களை உடனே சீரமைத்து தர வேண்டும் என மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!