8 ஆண்டுகளாக காதலித்து வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஜூன் 9ம் தேதி திருப்பதியில் டும் டும் டும்!!
2022-05-07@ 12:37:41

சென்னை : நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் அடுத்த மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நானும் ரவுடிதான், காத்து வாக்குல இரண்டு காதல், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் சுமார் 8 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளியான நிலையில், அதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுத்துவந்தார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று நயன்தாரா அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 9ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக திருப்பதியில் திருமண ஏற்பாடுகளை இருவரும் பார்வையிட்டதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!