மேற்கு வங்கத்தில் பரபரப்பு பாஜ இளைஞரணி தலைவர் மர்ம சாவு: அமித்ஷா நேரில் அஞ்சலி
2022-05-07@ 00:37:48

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜ இளைஞரணி தலைவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநிலம், காசிபூர் பாஜ இளைஞரணி தலைவர் அர்ஜூன் சௌராசியா. 2 நாள் பயணமாக மாநிலத்துக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமான நிலையத்தில் இருந்து பைக் பேரணியாக சென்று வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அர்ஜூன் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிலையில் கோஷ் பாகன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அர்ஜூன் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ஆளும் திரிணாமுல் காங்கிரசால் அர்ஜூன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் வரும் நாளில் பாஜ தலைவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் அமித் ஷா உயிரிழந்த அர்ஜூனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அர்ஜூன் மரணத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் அமித் ஷா, இது தொடர்பாக அரசு அறிக்கை தர வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். மாநிலத்தில் அச்சுறுத்தலான சூழலை உருவாக்க முயற்சிப்பதாக ஆளும் திரிணாமுல் அரசை அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகள்
இந்தாண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 2.2 கோடி வழக்குகள் தீர்வு; நேற்று மட்டும் 81 லட்சம் வழக்குகள் சமரசம்
பானையில் இருந்த குடிநீரை குடித்ததால் ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவன் பலி; ராஜஸ்தான் பள்ளியில் வன்கொடுமை
கார் மீது மோதியதால் கோபம்; ஆட்டோ டிரைவருக்கு ‘பளார்’ .! நிதானத்தை இழந்த பெண் கைது
பீகார் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு; காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள் உறுதி
பங்குச் சந்தையின் ‘பிக் புல்’ மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
பணமோசடி உள்ளிட்ட வழக்கில் சிக்கிய 3 ஜாம்பவான்களும் ஒரே சிறையில் அடைப்பு: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!