நெதர்லாந்தில் நடக்க இருக்கும் உலக தடகள போட்டியில் பங்கேற்க குமரி போலீசார் தேர்வு
2022-05-05@ 19:35:01

நாகர்கோவில்: தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2ம்தேதி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம் போட்டிகளில் குமர மாவட்டத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் திலீபன் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கமும், பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், டிரிபிள் ஜம் மற்றும் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம் போட்டிகளில் 3 தங்க பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கமும், முதல் நிலை காவலர் டேவிட் ஜான் 3000 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கமும் பெற்றனர்.
இந்த தடகள போட்டிகளில் பரிசுகள் பெற்ற போலீசாரை, எஸ்.பி. ஹரி கிரன் பிரசாத் பாராட்டினார். மேலும் உதவி ஆய்வாளர் திலீபன் மற்றும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா ஆகியோர் நெதர்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!