உடுமலை நகராட்சி 33வது வார்டில் தெருவிளக்கு வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகளை வெட்ட கோரிக்கை
2022-05-05@ 14:41:59

உடுமலை: உடுமலை நகராட்சியில் 33வது வார்டு பகுதியில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.நகர்ப்பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கும் போது, மரங்கள் இல்லாத பகுதிகளாகவும் மரங்கள் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளை வெட்டியும் விளக்குகளின் வெளிச்சம் வீதிகளில் விடும்படியும் செய்வது வழக்கம்.ஆனால் 33வது வார்டு உள்ள சௌத மலர் லே அவுட் பகுதியில் தெருவிளக்குகள் அனைத்தும் மரங்களின் இடையே அமைந்துள்ளது. அடர்ந்த மரக்கிளைகளின் காரணமாக வெளிச்சம் வீதியில் விழவே இல்லை. இதனால், அந்த வீதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவில் பெண்கள் தனியாக நடமாடுவதற்கு அச்சப்படும் சூழ்நிலை நீடிக்கிறது.
33வது வார்டு வழியாக எரிசனம்பட்டி, லட்சுமி நகர், கங்காதரன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எந்நேரமும் போக்குவரத்து இருந்து உள்ளது. லட்சக்கணக்கில் தெரு விளக்கு அமைக்க செலவிட்டும், அதன் பயன் பொதுமக்களுக்கு கிடைக்காதது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மரக்கிளைகளை வெட்டி மின்விளக்கு வெளிச்சம் வீதியில் விழுமாறு செய்து பொதுமக்கள் அச்சமின்றி நடமாட உதவிடும் படி கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்-முசிறி அருகே பரபரப்பு
கள்ளிக்குடி அருகே களப்பலி நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி துறையை சேர்ந்த பெண் தலைவர்கள், உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது கருப்பட்டி தயாரிக்கும் தொழிலுக்கு 50 சதவீதம் மானியம்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!