அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளில் இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை: வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி
2022-05-05@ 09:14:18

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கோடை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெயிலால் பொது மக்கள், முதியோர், குழந்தைகள், வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயில், தாக்கத்தால் பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கம் வெளிவர தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான நேற்று காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெயில், அனைவரையும் வாட்டி வதைத்தது.
இந்நிலையில், நேற்று மதியம், திடீரென மேக மூட்டம் ஏற்பட்டு, வெயில் குறைந்தது. பின்னர், எதிர்பாராத விதமாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமதுப்பேட்டை, பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், பெரியார் நகர், பொன்னேரிக்கரை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழந்து சூறைக்காற்று, இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.
இந்த திடீர் கன மழையினால் சாலைகளில் மழைநீர், வெள்ளமாக கரைப்புரண்டு ஓடியது. இதில், வாகன ஓட்டிகள் பள்ளங்களை தெரியாமல் தடுமாறி சென்றனர். திடீர் மழையால், வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா 8 ஊர் சாமிகள் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!