நடிப்புதான் நிறைய கற்றுக்கொடுத்தது: சொல்கிறார் இயக்குனர் செல்வராகவன்
2022-05-04@ 01:46:11

சென்னை: விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் நடிகராக அறிமுகமானவர், இயக்குனர் செல்வராகவன். தற்போது ‘சாணிக் காயிதம்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 6ம் தேதி ஓடிடியில் வெளியாகும் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் கூறியதாவது: நான் இயக்குனராகப் பணியாற்றும்போது, நேரத்தைப் பார்த்து வேலை செய்யக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்தேன். செய்யும் பணியில் முழு கவனத்துடன் ஈடுபடும்போது நேரம் போவதே தெரியாது. படப்பிடிப்பில் அனைத்து விஷயங்களும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான், ஷூட்டிங்கை பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்றுதான் நான் முதலில் நினைத்து இருந்தேன். ஆனால், அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதாக இருந்தது. பொறுமையாக இருந்து என்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேசுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
மேலும் செய்திகள்
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள் என்ன? 17ம் தேதி முகாம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!