பெரம்பூர் ரயில் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிரா ஆசாமி கைது
2022-05-04@ 01:37:57

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஷால் ஹிரே நேற்று முன்தினம் (2ம் தேதி) இரவு 9 மணிக்கு சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கர்மலா காவல் நிலையத்தில் குற்றவழக்கில் தொடர்புடைய உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அகமத் அன்சாரி என்பவர் மும்பை - எழும்பூர் (22157) விரைவு ரயிலில் பயணம் செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து தனிப்பிரிவு ஆய்வாளர் மூலம் சென்னை சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில்வே காவல் நிலையங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடை 1ல், மேற்கண்ட நபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அவரிடம் இருந்த ரூ.2.42 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளியை மகாராஷ்டிரா மாநில காவல்துறையிடம் ரயில்வே போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.
Tags:
Perambur railway station Maharashtra Asami arrested in criminal case பெரம்பூர் ரயில் நிலைய குற்ற வழக்கில் மகாராஷ்டிரா ஆசாமி கைதுமேலும் செய்திகள்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது
லாட்ஜுக்கு வரவழைத்து மாணவியை பலாத்காரம் செய்த பிரபல டிக் டாக் நடிகர் கைது: செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள் சிக்கின
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது
‘செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள்’ லாட்ஜுக்கு வரவழைத்து மாணவி பலாத்காரம்: பிரபல டிக் டாக் நடிகர் கைது
வாக்கிங் சென்றபோது நீதிபதியை கொன்ற 2 குற்றவாளிகளுக்கு: சாகும் வரை சிறை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!