இடி, மின்னலுடன் நள்ளிரவில் திடீர் மழை: காஞ்சி மக்கள் மகிழ்ச்சி
2022-05-03@ 00:37:37

காஞ்சிபுரம்: கோடை வெயில் சுட்டெரித்து வந்த வேளையில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை காலம் தொடங்கி, தமிழகத்திலேயே அதிக அளவாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 111 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை தொடர்ந்து வந்ததால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், திடீரென இடி மின்னலுடன் யாரும் எதிர்பாராத வகையில் கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, தாமல், பாலுசெட்டிசத்திரம், கீழ்அம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட் ஆகிய பகுதிகளில் மழைநீர், சாலையில் வெள்ளமாக ஓடியது. திடீர் மழையால், சாலையில் மழை நீர் தேங்கி, கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் தூங்கினார்கள்.
மேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...