கரூர் மகாத்மாகாந்தி சாலையில் வடிகால் பள்ளத்தில் பழைய கான்கிரீட் கம்பிகளால் அபாயம்: அகற்ற கோரிக்கை
2022-05-02@ 15:48:38

கரூர்: கரூர் மகாத்மா காந்தி சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் கான்கிரீட் கம்பிகள் அகற்றப்படாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், மகாத்மா காந்தி சாலை, திருச்சி சாலையுடன் இணையும் இடத்திலும் சாலையோரம் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் கான்கிரீட் கம்பிகள் அகற்றப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் இந்த பகுதியின் வழியாக கடந்து செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். கம்பிகள் வெளியே தெரியும் வகையில் இந்த வடிகால் பள்ளம் உள்ளதால் அடிக்கடி சிறு விபத்துக்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, ஆபத்தான நிலையில் உள்ள கான்கிரீட் கம்பிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தோவாளை-தாழக்குடி சாலை; ரூ.3.28 கோடியில் சீரமைப்பு: ரூ.3.87 கோடியில் ஆற்றின்குறுக்கே பாலமும் அமைக்கமுடிவு
மேட்டூர் அணைக்கு 19,000 கனஅடி நீர்வரத்து
வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது
கேரளாவில் 31ம் தேதி ஓணம் பண்டிகை; தோவாளையில் அறுவடைக்கு தயாரான பூக்கள்: ஆர்டர்களும் குவிந்து வருகிறது
பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...