புதுப்படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை திருமணத்துக்கு தயாராகும் சாய் பல்லவி?
2022-05-02@ 08:08:52

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் ஏற்றிருந்த மலர் டீச்சர் கேரக்டரின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், ‘தியா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’, சூர்யா ஜோடியாக ‘என்ஜிகே’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பாவக்கதைகள்’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால், மீண்டும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தும் அவரது கைவசம் ‘விராட பர்வம்’ என்ற படம் மட்டுமே இருக்கிறது. இதில் அவர் பெண் நக்சலைட் கேரக்டரில் நடித்துள்ளார். சிரஞ்சீவியின் தங்கையாக ‘போலா சங்கர்’ படத்தில் வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். மேலும் சில புதுப் பட வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை. இதனால், சாய் பல்லவி திருமணம் செய்துகொள்ள தயாராகி விட்டார் என்றும், பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டனர் என்றும், அதனால்தான் அவர் புதுப்படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்றும் தெலுங்கு படவுலகில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து சாய் பல்லவி அளித்த பேட்டியில், ‘தெலுங்கில் எனக்கு ஒரு தனி இமேஜ் இருக்கிறது. சாய் பல்லவி என்றால் கனமான, நடிப்புத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டரில் மட்டுமே நடிப்பேன் என்ற எண்ணம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும். அதனால்தான் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். என்றாலும், அவரது திருமணம் பற்றிய வதந்திகள் ஓயவில்லை.
மேலும் செய்திகள்
கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் திட்டத்துக்கு ஆணையம் அனுமதி
சென்னையில் உள்ள ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலம்; அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
இந்தாண்டு சிறப்பு தணிக்கை மூலம் அரசுக்கு ரூ.158 கோடி வருவாய்; ஜிஎஸ்டி மண்டல தலைமை ஆணையர் தகவல்
மண்டல வருமான வரித்துறையில் ரூ.1 லட்சம் கோடி வரி வசூல்; தலைமை ஆணையர் பேச்சு
நடப்பு ஆண்டில் ஐசிஎப் சார்பில் 3,500 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்; பொது மேலாளர் தகவல்
6 வருடங்களுக்கு பிறகு ரிப்பன் மாளிகையில் தேசிய கொடி ஏற்றம்; மேயர் பிரியா தலைமையில் நடந்தது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!