வெயிலை சமாளிக்க தயார்நிலை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்
2022-05-02@ 07:42:32

புதுடெல்லி: நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வருகிறது. வட மாநிலங்களின் பல இடங்களில் 116 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் அடிக்கிறது. அடுத்த வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கோடை கால நோய்களும் தாக்க தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘மே மாதம் வரையில் 116 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருப்பதால், வெயில் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை தயார்நிலையில் வைக்க வேண்டும். வெயில் சம்பந்தப்பட்ட நோய்கள் தொடர்பான, தேசிய நடவடிக்கை வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...