அந்தமானில் நேற்றிரவு நிலநடுக்கம்
2022-05-01@ 14:10:17

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் நேற்றிரவு 11.04 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அதன் தீவிரம் 4.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அந்தமானில் உள்ள டிக்லிபூருக்கு தென்மேற்கே 3 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நில நடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் கேம்ப்பெல் தளத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு ஜனவரியில் 24 நாட்களில் 10 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் யூனியன் பிரதேசமான லடாக்கில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 3.4 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!