சிஎஸ்கே அணிக்கு தோனி மீண்டும் கேப்டன்
2022-05-01@ 01:06:23

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் ரவுண்டர் ஜடேஜா தலைமையில் விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், எம்.எஸ்.தோனியே மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்த வேண்டும் என்று ஜடேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு வீரராக சிறப்பாக செயல்படவும், அணியின் வெற்றிக்கு உதவும் வகையிலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை ஏற்று, எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, புனே எம்சிஏ ஸ்டேடியத்தில் இன்று இரவு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் தோனி மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார்.
மேலும் செய்திகள்
சில்லி பாய்ன்ட்...
ஃபிபா அதிரடி நடவடிக்கை இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்
சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அலிசன்; லெய்லா வெளியேற்றம்
22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கதொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் சிமோனா, புஸ்டா சாம்பியன்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!