மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
2022-04-30@ 14:31:41

சென்னை: மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் தொடர்புடைய மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்த உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் உரிமையாளர் ஹேமா ஹுவாரணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உரிமையாளர் இடைக்கால தடை பெற்றிருந்தார்.
இந்த தடையை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்ரா முன்பு நடைபெற்றது. அப்போது சுதந்திரமான முறையில் தொழில் நடத்தும் உரிமையில் காவல்துறை தலையிட முடியாது என்றும் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிக்கு தான் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 1987ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்று விளக்கம் அளித்தார்.
அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர் மேற்கொள்காட்டினார். இதையடுத்து மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் புகார் வந்தால் உள்ளூர் போலீசார் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!