இடியும் நிலையில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை சீரமைக்க கோரிக்கை
2022-04-30@ 12:30:15

திருவாடானை : இடியும் நிலையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை மராமத்து செய்து தர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானையில் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துவிட்டது.
இதனால் பல இடங்களில் கம்பி மட்டுமே தெரிகிறது நுழைவாயில் பகுதியிலேயே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் இங்கு வரும் விவசாயிகள் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் தான் அலுவலர்களை சந்திக்க செல்கின்றனர். கீழ்தளத்தில் வேளாண்மைத்துறை அலுவலகமும் மேல்மாடியில் தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகிறது இரண்டு துறைகளுக்கும் விவசாயிகள் அதிக அளவில் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இப்படி ஆபத்தான கட்டிடத்தில் ஊழியர்களும் அச்சத்துடன் தான் பணி செய்கின்றனர் எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பே பெயர்ந்துள்ள சிமெண்ட் கரைகளை அகற்றிவிட்டு கட்டிடத்தை புதிதாக மராமத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திம்மையன் பேட்டை ஊராட்சியில் கைபம்பு; இங்கே... தண்ணீர் எங்கே...? சீரமைக்க இருளர் மக்கள் வேண்டுகோள்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் வரும் அரசு பேருந்து: பயணிகள் குழப்பம்
கொலை வழக்கில் அப்ரூவராக மாற முயன்றதால் கத்தியால் சரமாரி குத்தி ரவுடி கொலை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!