தமிழக முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர் : நெல்லையில் சுவாமி நாராயணதீர்த்தர் பேட்டி
2022-04-30@ 00:26:18

நெல்லை: தமிழக முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர் என இமாலய கங்கோத்ரி காளிகாம்பா பீடம் சுவாமி நாராயண தீர்த்தர் தெரிவித்தார்.தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நெல்லை வந்த அவர் அளித்த பேட்டி: கடந்த 2018ம் ஆண்டு நெல்லையில் நடந்த தாமிரபரணி புஷ்கரத்தில் பங்கேற்றேன். தற்போது மீண்டும் நெல்லைக்கு வந்துள்ளேன். தமிழகத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஆட்சி மாற்றம், காட்சி மாற்றம் நடந்துள்ளது. அதில் பல நன்மைகளும் நடந்துள்ளன. ஆன்மீகத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. தமிழகத்தில் ராஜராஜ சோழன், சேரர்கள், பாண்டியர்கள் அதிக கோயில்களை அமைத்துள்ளனர். அதனை பாதுகாப்பது நமது கடமை.
தமிழக முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர். அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என இந்து மதம் வலியுறுத்துகிறது. இதனால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும். இந்துக் கோயில்கள் மூலம் பெறப்படும் வருமானத்தை இந்து ஆலய மேம்பாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!