புதுச்சேரியில் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் செலவை வைத்தவர்களிடமே வசூலிக்க வேண்டும்: புதுச்சேரி நகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
2022-04-29@ 01:46:10

சென்னை: புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாக பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே நகராட்சியிடம் புகார் அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரர் தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி, புதுச்சேரியில் பேனர் கலாசாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.புதுச்சேரி நகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை வைத்தவர்களிடமே, அதை அகற்றியதற்கான செலவை புதுச்சேரி நகராட்சி வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
Tags:
Pondicherry Road Banner Pondicherry Municipality Icord புதுச்சேரி சாலை பேனர் புதுச்சேரி நகராட்சி ஐகோர்ட்மேலும் செய்திகள்
மின்சார கேபிள் அமைக்கும் பணிக்காக கிண்டி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
பூக்கடை பகுதியில் 2 ஆண்டாக வாடகை தராத 130 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர்
புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!