மாற்றுத்திறனாளி நலத்துறையில் போலி அடையாள அட்டைகள் கண்டறிந்து ரத்து செய்யப்படும்: வேலூரில் ஆணையர் பேட்டி
2022-04-29@ 01:21:37

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. போட்டியை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜான் டாம் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் பங்கேற்றனர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜான் டாம் வர்கீஸ் அளித்த பேட்டி: மாற்றுத்திறனாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் போலி அடையாள அட்டைகள் உள்ளது. இதில் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அதிக போலி அட்டைகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தனி குழு அமைத்து வீடு, வீடாக மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் கண்டறியப்பட்டு அவைகள் ரத்து செய்யப்படும். மேலும் அடையாள அட்டை நேரடியாக மாற்றுத்திறனாளர்களின் வீடுகளுக்கே வழங்கப்படுவதிலும் சில பிரச்னைகள் உள்ளது. ஒன்றிய அரசே நேரடியாக அடையாள அட்டைகளை தபால் மூலம் அனுப்புகிறது. இதுவரை தமிழகத்திற்கு 7 லட்சம் ஸ்மார்ட் கார்டை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. மீதம் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வர வேண்டியுள்ளது. ஒன்றிய அரசு தபால் மூலம் அனுப்புவதற்காக ஒதுக்கிய ரூ.9 கோடி முறைகேடு என கூறுகின்றனர். அவ்வாறு ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கவில்லை. அவர்களாகவே செலவு செய்தார்கள். முறைகேடு என கூறுவது தவறானது. போலி அடையாள அட்டைகளை ஒழித்தால் உண்மையான மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Commissioner for Welfare of the Handicapped Fake Identity Cards Cancellation Vellore மாற்றுத்திறனாளி நலத்துறை போலி அடையாள அட்டைகள் ரத்து வேலூரில் ஆணையர்மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!