அனுமதியின்றி நடத்திய மசாஜ் சென்டருக்கு ‘சீல்’: கொடைக்கானலில் பரபரப்பு
2022-04-27@ 16:45:25

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி 4வது தெருவில் முக்கிய குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. கேரளாவை சேர்ந்த 6 பெண்கள், இப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், நகராட்சிக்கும் புகார் அளித்தனர்.
அதன்பேரில், கொடைக்கானல் நகர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். இதில், அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து, அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்த கூடாது என 6 இளம்பெண்களுக்கும் தெரிவித்து, ஊருக்கு செல்ல அறிவுறுத்தினர். மேலும் மசாஜ் சென்டருக்கு சீல் வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால், ஆனந்தகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!