மாவட்ட வளைகோல்பந்து லீக் போட்டி ஹாக்கி வீரர்களுக்கு காஞ்சி கலெக்டர் அழைப்பு
2022-04-27@ 15:15:53

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், ஆண்களுக்கான மாவட்ட அளவிலான வளைகோல் பந்து லீக் போட்டி வரும் 30ம்தேதி காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும்.
போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் வரும் 29ம்தேதி மாலை 5 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். மாவட்ட அளவில் வெற்றிபெறும் அணிகள் மண்டல போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வீரர்கள் கலந்துகொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!