திம்பம் மலைப்பாதையில் பழுதான கன்டெய்னர் லாரி தமிழகம்-கர்நாடக இடையே கடும் போக்குவரத்து பாதிப்பு
2022-04-27@ 12:42:30

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுதானதால் தமிழக -கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம் - கர்நாடகம் இரு மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக நேற்று காலை கண்டெய்னர் லாரி கோவையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு புறப்பட்டது.
9வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நின்றது. இதனால் மலைப் பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பழுதான லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.
5 மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி நகர்த்தி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மலைப்பாதையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக புறப்பட்டுச் சென்றன.திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றதால் தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு உயர்வு
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: நின்றபடி பைக் ஓட்டி வாலிபர் சாகசம்
கள்ளக்குறிச்சி அருகே சொர்ணகடேஸ்வரர் கோவிலில் சோழர் கால மன்னர்களில் 2 சிலை மாயம்...
தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாட்டம்...
காவல்துறையில் 3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம்
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ‘டிவிட்’ செருப்பு வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்கொள்ளலாம்: சமூக வலைதளத்தில் வைரல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!