முத்துப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத கல்வி அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
2022-04-24@ 14:27:27

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் சாலைக்கு முன்பு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அரசு மீட்டு உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் புதியதாக கட்டி திறக்கப்பட்டது. போதுமான அலுவலர்களுடன் இயங்கி வந்தது. கடந்த 2009ம் ஆண்டு முத்துப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட கடும்மழை மற்றும் வெள்ளத்தில் இந்த உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் வெள்ளநீர் புகுந்து அங்கிருந்த அனைத்து ஆவணங்களும் முற்றிலும் சேதமானது. மேலும் கட்டிடமும் சேதமானது.
அதையடுத்து வந்த நாட்களில் தனியார் ஒருவர் தானமாக வழங்கிய முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் காவல் நிலையம் எதிரில் உள்ள புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் மாற்றப்பட்டு இன்று வரை இயங்கி வருகிறது. இதனால் பயன்பாடு இல்லாத கல்வி அலுவலர் அலுவலக கட்டிடம் முழுமைக்கும் கருவை காடுகளாக மாறிவிட்டது. இதனால் விஷஜந்துக்கள் தங்கும் ஒரு பகுதியாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது.
இதனால் அருகில் குடியிருக்கும் மக்கள் அச்சத்துடன் குடியிருந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இதன் அருகே அரசு பெண்கள் பள்ளியின் தங்கும் விடுதியும் உள்ளதால் மாணவிகள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். எனவே பயன்பாட்டில் இல்லாத உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக கட்டிடத்தை இடித்து சீரமைத்து மீண்டும் இந்த கட்டிடத்தில் அலுவலகம் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!