‘2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும்’ என்ற பெயரில் ஊட்டியில் 25, 26ல் துணை வேந்தர்கள் மாநாடு: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
2022-04-24@ 00:25:22

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளார். மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அவர்தான் நியமனம் செய்து வருகிறார். வழக்கமாக அரசு பரிந்துரை செய்கிறவர்களில் இருந்து ஒருவரை கவர்னர் தேர்வு செய்வார். ஆனால் பன்வாரிலால் புரோகித் கவர்னரான பிறகு இந்த வழக்கம் அதிமுக ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து கவர்னரே தன்னிச்சையாக துணை வேந்தர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அடிக்கடி கவர்னர் மாளிகை மற்றும் வீடியோ கான்பரன்சிங்கில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் அனைத்து பட்டமளிப்பு விழாக்களிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில், 2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும் என்ற பெயரில் ஊட்டியில் கருத்தரங்கு ஒன்றினை நடத்த கவர்னர் மாளிகை ஏற்பாடு செய்துள்ளது.
25, 26 ஆகிய இரு நாட்கள் நடக்கும் இந்த கருத்தரங்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். அனைவருக்கும் இதற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கத்தை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி துவக்கி வைத்து கலந்துகொள்கிறார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகை வந்தடைந்தார். கவர்னர் வருகையையொட்டி நேற்று ஊட்டி-கோத்தகிரி சாலையில் போக்குவரத்து 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. மேலும், ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி-கோத்தகிரி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கல்விக்கு தொடர்பில்லாத வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Tags:
‘India will take over world leadership in 2047’ Vice Chancellors Conference in Ooty on 25th and 26th Tamil Nadu Governor RN Ravi ‘2047ல் இந்தியா உலக தலைமை ஏற்கும்’ ஊட்டியில் 25 26ல் துணை வேந்தர்கள் மாநாடு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிமேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!