கொரோனாவை விரைந்து குணப்படுத்தும் இன்டோமெதசின் மருந்து : சென்னை ஐஐடி மருத்துவக்குழு ஆய்வில் தகவல்
2022-04-23@ 10:04:28

சென்னை : விலை மலிவான இன்டோமெதசின் என்ற மருந்து கொரோனாவை விரைந்து குணப்படுத்துவதாக சென்னை ஐஐடி மருத்துவ குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்து பல்வேறு வகையான அழற்சி தொடர்பான சிகிச்சைகளுக்கு இன்டோமெதசின் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவது குறித்து சென்னை ஐஐடி மருத்துவக் குழு ஆய்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. இந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை என்றும் 4 நாட்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இன்டோமெதசின் மருந்தின் செயல்திறனை நிரூபித்த சென்னை ஐஐடி மருத்துவக்குழுவின் ஆய்விற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி ஆய்விற்கு சர்வதேச விமசகர்கள் 5க்கு 4 என்ற மதிப்பீடு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தும் இன்டோமெதசின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் என்று ஐஐடி மருத்துவ குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!