ரஷ்யா மீதான போரின் காரணமாக 60 பில்லியன் டாலர் உக்ரைனுக்கு இழப்பு: உலக வங்கி தகவல்
2022-04-22@ 14:29:14

வாஷிங்டன்: போரால் உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உலக வங்கித் தலைவர் கூறினார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 2 மாதங்களுக்கு மேலான நிலையில் அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டனர். ரஷ்யப்படைகள் உக்ரைனின் ஒவ்வொரு நகரமாக அழித்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது.
இந்நிலையில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் ரூ.4,57,169,13,00,000) இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. போர் மேலும் தொடருமானால் இழப்பு மதிப்பு அதிகரிக்கும். உக்ரைனுக்கு தேவையான நிதி உதவிகளை உலகவங்கி செய்யும். குறுகிய கால சேத மதிப்பீட்டின் கீழ் உதவிகள் வழங்கப்படும்’ என்றார்.
மேலும் செய்திகள்
உலக நாடுகளில் இதுவரை 58.86 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
தேசத் துரோக வழக்கில் ரஷ்ய விஞ்ஞானி கைது; புடினுக்கு நெருக்கமானவர்
காது பெருசா இருக்கு, உயரம் மாறியிருக்கு இது, அவர் இல்லை; பொது இடங்களில் சுற்றும் போலி புடின்
போருக்கான முதல் கட்ட நடவடிக்கை? தைவான் மீது சீனா சைபர் தாக்குதல்; முக்கிய துறைகளின் கம்யூட்டர்கள் முடக்கம்: ஓட்டலில் ஏவுகணை விஞ்ஞானி மர்மச்சாவு
உலகம் முழுவதும் 54 லட்சம் பயனர் கணக்கு விவரம் திருடு போனது; உண்மை ஒப்புக் கொண்டது டிவிட்டர்
சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு தடை; இந்தியாவின் எதிர்ப்பால் திடீர் முடிவு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!