ரிஷியூர் கிராமத்தில் பயிர்களின் மகசூலை அதிகரிக்க கோடை புழுதி உழவுப் பணி
2022-04-22@ 13:49:18

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ரிஷியூர் கிராமத்தில் இயற்கை வேளாண் மையத்தில் நில வழிபாடு செய்து சித்திரை புழுதி உழவு செய்தனர்.
சித்திரை உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று முன்னோர்கள் கூறினார்கள். தை மாதம் அறுவடை முடித்த பிறகு ஒரு சிறிய மழை பெய்து விட்டால் இயற்கையாகவே மண்ணின் ஈரப்பதத்தை காப்பதற்காக வயல் வெளிகளில் களைச்செடிகள் தானாகவே முளைத்து பசும் போர்வை விரித்தது போல காட்சி தரும்.
சித்திரை முதல்நாளில் பொன்னேர் பூட்டி கோடை உழவு செய்வதன் மூலம் களைச்செடிகள் மண்ணுக்குள் சென்று மக்கி மண்ணுக்கு தேவைப்படும் 30 சதம் பசுந்தாள் உரம் இதன்மூலம் கிடைத்துவிடும். மேலும் சாண எரு அடிப்பதன் மூலம் 70 சதம் தொழுஉரம் கிடைப்பதனால் எந்தவித உரச் செலவும் இல்லாமல் முன்னோர்கள் சிறப்பான முறையில் பாரம்பரிய விவசாயத்தில் மகசூல் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டார்கள்.
இது தொடர்பாக இயற்க்கை விவசாயி செந்தில் உமையரசி கூறியதாவது: நம்முடைய மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் தோல்வியை படிக்கவேண்டும் என்று கூறுவார். இந்த ஆண்டு தோல்வியிலிருந்து கிடைத்த பாடம் என்ன என்றால்? அதிக கோடைமழை காரணமாக உளுந்து மற்றும் பயறு எதிர்பார்த்த விளைச்சலை தராத காரணத்தினால், கோடை உழவு செய்து மண்ணுக்கு உரம் ஆக்கியதாகவும் மேலும் கோடை உழவு செய்வதனால் பூச்சிகள் மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.
நம்முடைய அரசு அறிவுறுத்தலின்படி மாற்றுப் பயிராக இந்த ஆண்டு கிட்டத்தட்ட 7 ஏக்கர் உளுந்து மற்றும் பயறு, 10 ஏக்கர் எள்ளும் சாகுபடி செய்யப்பட்டது இந்த கோடை மழை காரணமாக எள் சிறப்பாக வளர்ந்து உள்ளது. ஆனால் உளுந்து மற்றும் பயறு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மண்ணின் வளத்தை பெருக்கும் வகையில் உளுந்து, பயறு மற்றும் களைச் செடிகளை கோடை உழவு செய்து மண்ணுக்கு உரம் ஆக்கியதாகவும், இந்த முறை தோல்வியிலிருந்து கற்ற பாடம் இது என்று கூறினார்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!