உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்தில் சென்ற போது மின்சாரம் பாய்ந்து 3 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு: 2 போ் கைது
2022-04-21@ 10:13:08

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி பேருந்தில் சென்ற போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பள்ளி மாணவன் ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டு எட்டிப்பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத வகையில் மின்கம்பம் சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அதிரமடைந்து சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்
பக்தர்கள் வருகை குறைந்தது அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
`இந்தியாவில் குணமடையுங்கள்’மருத்துவ சுற்றுலா தகவல்தளம் ஆக.15ல் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்
போலீசை சிறைபிடித்த பாஜ பிரமுகர் மீது வழக்கு
இன்று பிரிவு உபசார விழா துணை ஜனாதிபதியுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு
40 கிலோ வெடிபொருளை சுமக்கும் எல்லை பாதுகாப்பில் நவீன டிரோன்கள் எச்ஏஎல் நிறுவனம் தயாரிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!