புதைவட கம்பி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பேரவையில் பிரபாகர் ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்
2022-04-21@ 01:33:55

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் துணை கேள்வி எழுப்பி விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா பேசுகையில், `விருகம்பாக்கம் தொகுதியை பொறுத்தவரை அதிகம் மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருக்கிறது. குறிப்பாக கடந்த காலங்களில் பணிகள் மெத்தனமாக நடந்ததால் வெறும் 37 சதவீதம் பணிகள்தான் புதைவிட கம்பி புதைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாயிண்ட் அவுஸ் என்று சொல்வார்கள், ஓட்டு வீடுகள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி. எம்ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம், கே.கே.நகர், சாலிகிராமம் பகுதிகளில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணியை அரசு விரைந்து செய்து தர வேண்டும்’ என்றார்.
இதற்கு பதிலளித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், `விருகம்பாக்கம் பகுதியில் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பது முதல்வரின் உத்தரவு. முதல்வரின் உத்தரவுப்படி அந்த பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முடிக்கப்படும்’ என்றார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!