உலக கோப்பை தொடருக்கு கார்த்திக்கை சேர்க்கலாம்...கவாஸ்கர் ஆதரவு
2022-04-20@ 00:37:34

மும்பை: இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில், ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் தினேஷ் கார்த்திக்கை சேர்க்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் கார்த்திக் (36) கவனம் ஈர்த்து வருகிறார். ஆர்சிபி அணிக்காக பரபரப்பான கடைசி கட்ட ஓவர்களில் களமிறங்கி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். பஞ்சாப்புக்கு எதிராக 32* (14 பந்து), கொல்கத்தாவுக்கு எதிராக 14* (7 பந்து), ராஜஸ்தானுக்கு எதிராக 44* (23 பந்து), மும்பைக்கு எதிராக 7*(2 பந்து), சென்னைக்கு எதிராக 34 (14 பந்து), டெல்லிக்கு எதிராக 66* ரன் (34 பந்து) விளாசியுள்ளார்.
அவரது சராசரி 197, ஸ்டிரைக் ரேட் 209.7 ஆக உள்ளது. இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசையை கார்த்திக் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ‘டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற விரும்புவதாக தினேஷ் கூறியுள்ளார். நான் சொல்வது என்னவென்றால், அவரது வயதை பார்க்காதீர்கள். அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பாருங்கள். இந்திய அணியில் 6 அல்லது 7வது இடத்தில் அவரை இறக்கினால் நீங்கள் எதிர்பார்க்கும் வேலையை அவர் செய்வார்’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
சில்லி பாய்ன்ட்...
ஃபிபா அதிரடி நடவடிக்கை இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்ட்
சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அலிசன்; லெய்லா வெளியேற்றம்
22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கதொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் சிமோனா, புஸ்டா சாம்பியன்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!