அரக்கோணம் பயிற்சி மையத்தில் சிஆர்பிஎப் வீரர் தூக்கிட்டு தற்கொலை
2022-04-18@ 04:42:23

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்று வந்த வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெய்பிரகாஷ்குமார்(23) என்பவர் 10 மாத அடிப்படை பயிற்சி மேற்கொள்ள கடந்த மாதம் வந்தார். இந்நிலையில் அங்குள்ள கேண்டீன் அருகே ஒரு அறையில் நேற்று காலை மின்விசிறியில் தூக்குப்போட்டு ஜெய்பிரகாஷ்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து ஜெய்பிரகாஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பயிற்சி மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Hexagon Training Center CRPF player hanged and committed suicide அரக்கோணம் பயிற்சி மைய சிஆர்பிஎப் வீரர் தூக்கிட்டு தற்கொலைமேலும் செய்திகள்
12 அடி அகலம், 32 அடி நீள தேசிய கொடி உருவாக்கி மழலையர் பள்ளி குழந்தைகள் சாதனை
விடுதியில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்: ஊத்தங்கரையில் போலீஸ் குவிப்பு
திருத்தணி அருகே வீடுகள் இடிப்பை கண்டித்து பொது மக்கள் மறியல்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சமரசம்
உத்திரமேரூரில் ரூ.21 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்; சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
இலவச கால்நடை மருத்துவமுகாம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!