பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை விவகாரம் ஓபிஎஸ் தம்பி, போலீஸ் அதிகாரிகள் குற்றத்தை ஐகோர்ட்டில் நிரூபிப்போம்: கோபியில் வக்கீல் பேட்டி
2022-04-12@ 00:01:06

கோபி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த வக்கீல் ப.பா.மோகனுக்கு கோபியில் தமிழர் உரிமை கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவர் அளித்த பேட்டி:
தற்போது சமூக நீதிக்கான ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது. சாட்சிகளுக்கும், வக்கீல்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தமிழக அரசின் கடமை. பாடத்திட்டத்திலேயே சாதி மறுப்பு திருமணங்கள், சமத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா, பெரியகுளத்தில் காசி விஸ்வநாதர் கோயில் பூசாரி நாகமுத்துவை சாதியை சொல்லி திட்டியதோடு, போலீசாரை வைத்து பல்வேறு வழக்குகள் போட வைத்ததால், அவர் கைப்பட எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கையும் எடுத்து நடத்தி வருகிறோம். பூசாரி நாகமுத்து தற்கொலைக்கு ஓ.ராஜா மட்டும் காரணமில்லை. அவருக்கு துணையாக இருந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பலரையும் சாட்சியாக சேர்த்து உள்ளனர். அந்த சாட்சிகள்தான் குற்றத்திற்கு துணை புரிந்து உள்ளனர். அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க உச்சநீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளது. அது முடிவடைந்ததும் அந்த வழக்கு நடத்தப்படும். உண்மை நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் தற்போது முழுமூச்சாக இறங்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
In Periyakulam temple priest suicide OBS brother police officers பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை ஓபிஎஸ் தம்பி போலீஸ் அதிகாரிகள்மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!