உளுந்தம் பருப்பு விரைவில் வழங்கப்படும்; கைரேகை பிரச்னைக்கு புது ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி தகவல்
2022-04-09@ 03:17:27

தமிழக சட்டப் பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து பேசியதாவது: கண்டிப்பாக உளுந்தம் பருப்பு ஒரு கிலோவும், சர்க்கரையும் கூடுதலாக வழங்குவோம் என்று அறிவித்தோம். சொன்ன வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். டெல்டா மாவட்டங்களிலும் திறந்த வெளி ’கேம்ப்’ இருக்காது. தமிழ்நாட்டில் ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரேஷன் அட்டைகள் இருக்கிற 5 ஆயிரம் கடைகள் உள்ளன. அந்தக் கடைகளைப் பிரிப்பதற்கான ஒரு திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றார்.
அப்போது சபாநாயகர் மு.அப்பாவு குறுக்கிட்டு, ‘‘கைரேகை விழாமல் அதிக மக்கள் அதிகாரியிடம் சென்று ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதமும் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு கடையிலும் 20 சதவிவீத மக்களுக்காவது இந்த நிலை ஏற்படுகின்றது. அதற்கு ஒரு சரியான முடிவினை சொல்லிவிடுங்கள்” என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, ‘முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவாக எடுக்கப்பட உள்ளது. இனிமேல் கைரேகை கூட வேண்டாம் என்றார்.
மேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...