நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த விவகாரம்..நாளை நடைபெற உள்ள ஆஸ்கர் அகாடமி கூட்டத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பு?
2022-04-07@ 10:37:37

லாஸ் ஏஞ்சிலஸ்: ஆஸ்கர் விருது விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 28-ம் தேதி 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் கோபமடைந்த நடிகர் வில் ஸ்மித் மேடைக்கே சென்று நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கு ஆதரவாக பலதரப்பினரும், நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆதரவாக பலதரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து தனது செயலுக்கு வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு தனது விசாரணையை தொடங்கிய நிலையில், ஆஸ்கர் அமைப்பின் பதவியில் இருந்து நடிகர் வில் ஸ்மித் விளக்கினார்.
இந்நிலையில், ஆஸ்கர் அகாடமி கூட்டம் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் இந்த கூட்டம் நாளை நடைபெற உள்ளதா கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது தொடர்பான முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!