டி.எம்.எஸ். வளாகத்தை முற்றுகையிட்ட செவிலியர்கள்: குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீஸ்..!!!
2022-04-04@ 15:48:39

சென்னை: தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தை முற்றுகையிட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா பரவலின்போது, கடந்த 2020ம் ஆண்டு மருத்துவ தேர்வாணையம் மூலம் 2400 செவிலியர்கள் நிரந்தரமாகவும், 800 செவிலியர்கள் தற்காலிகமாகவும், பணியமர்த்தப்பட்டனர். கடந்த மாதம் நிதிப்பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, தற்காலிக செவிலியர்கள் 800 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் செவிலியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களின் அருகில் போராட முயன்றபோது அவர்களையும் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இவர்களை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு சமுதாய நலக்கூடங்களில் அடைத்தனர். தமிழக முதல்வர் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 34-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டம்!
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நெல்லை கண்ணன் மறைவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல்..!
ஆவடி தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...