மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா
2022-03-22@ 12:50:06

மேலூர் : மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.மதுரை மாவட்டம், மேலூர் அருகே சருகுவலையபட்டி மெய்யப்பன்பட்டியில் உள்ள மெய்யப்பன் கண்மாயில், நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. பாரம்பரிய முறைப்படி கிராம மக்கள் வலை, கச்சா, ஊத்தா போன்ற உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.
முன்னதாக ஊர் பெரியவர்கள் வெள்ளை வீச, கண்மாயை சுற்றி குவிந்திருந்த கிராம மக்கள் ஒரு சேர கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். விவசாய பணிகள் முடிவடைந்து கண்மாய், குளங்களில் நீர் வற்றி வருவதால், மேலூரை சுற்றி உள்ள பல கண்மாய்களில் தினசரி மீன்பிடி விழா நடந்து வருகிறது. இதே சருகுவலையபட்டியில் நேற்று முன்தினமும் மீன்பிடி விழா நடைபெற்றது. இந்த ஊராட்சியில் மட்டும் இதுவரை 5 கண்மாய்களில் மீன்பிடி விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தோவாளை-தாழக்குடி சாலை; ரூ.3.28 கோடியில் சீரமைப்பு: ரூ.3.87 கோடியில் ஆற்றின்குறுக்கே பாலமும் அமைக்கமுடிவு
மேட்டூர் அணைக்கு 19,000 கனஅடி நீர்வரத்து
வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது
கேரளாவில் 31ம் தேதி ஓணம் பண்டிகை; தோவாளையில் அறுவடைக்கு தயாரான பூக்கள்: ஆர்டர்களும் குவிந்து வருகிறது
பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...