காங். திட்டம் முடிவெடுக்கும் குழுவில் ஜி-23 தலைவர்கள்
2022-03-22@ 00:14:34

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி தலைவர்களான ஜி-23 தலைவர்கள் மீண்டும் கட்சி தலைமை குறித்து கேள்வி எழுப்பினர். கட்சியில் யார் முடிவு எடுக்கிறார்கள் என்பதே தங்களுக்கு தெரியவில்லை என்றும், பத்திரிகைகளில் பார்த்து தான் கட்சி மேலிட முடிவுகளை அறிந்து கொள்வதாகவும் அவர்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலிடம் புகாரளித்தனர். மேலும், கூட்டு தலைமைக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஜி-23 குழுவில் உள்ள தலைவர்கள் சிலருக்கு, கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் இடமளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த தலைவர்களில் சிலர் காங்கிரஸ் செயற்குழுவிலோ அல்லது நாடாளுமன்ற கட்சிக் குழு போன்ற புதிய அமைப்பிலோ இடம் பெறலாம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிருப்தி குழுவை சமாதானப்படுத்த தற்போதுள்ள முக்கிய பொறுப்பில் உள்ள சில தலைவர்கள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மாற்றப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திகள்
ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி
சொல்லிட்டாங்க...
தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப்பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? பாமக தலைவர் அன்புமணி கேள்வி
கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி முழுமையாக குணமடைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து 30ம் தேதி மாநிலம் தழுவிய மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!