கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு லாரி-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்: 5 பேர் படுகாயம்
2022-03-19@ 00:48:52

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் - சத்தியவேடு வழியாக (தடம் எண்-112) அரசு பேருந்து நேற்று மாதர்பாக்கம் பஜார் வீதிக்கு சென்றது. பின்னர் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மாதர்பாக்கம் - சத்தியவேடு திருப்புமுனை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருப்புமுனையில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மணல் லாரி, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பேருந்தின் முன்பகுதி நொருங்கி சேதமானது. மேலும், லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணி, நடத்துனர் சங்கர், பஸ்சில் பயணம் செய்த சத்தியவேடு பகுதியை சேர்ந்த சுமித்ரா மற்றும் மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்த நாகரத்தினம், குப்பையா உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், லாரியில் பயணம் செய்தவர்கள் காயமின்றி தப்பினர்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!