இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: இலங்கை அணி 109 ஆல்-அவுட்
2022-03-13@ 15:11:22

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற நிலையில் 2-வது போட்டி பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. பெங்களூரு மைதானத்தில் சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி 23 ரன்கள் எடுத்து இம்முறையும் ரசிகர்களை ஏமாற்றினார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 109 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மேத்யூஸ் 43 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகள்
ஜிம்பாப்வேயுடன் முதல் ஒருநாள் போட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; தவான், கில் அசத்தல்
நியூசி.யை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போராடி தோற்றார் நடால்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் இகா ஸ்வியாடெக்; மேடிசன் கீஸ் வெற்றி: நடால் அதிர்ச்சி தோல்வி
ஆப்கனுக்கு எதிரான 5வது டி20; அயர்லாந்து அபார வெற்றி: தொடரை 3-2 என கைப்பற்றியது
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...