அனைத்து மண்டலங்களிலும் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்படும்: மேயர் பிரியா ராஜன் பேச்சு
2022-03-12@ 01:54:49

சென்னை: ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்களுக்கான சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதற்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவ வசதிகள் சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது.
அடையாறு மண்டலம் தரமணி, பாரதியார் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் மேயர் பிரியா ராஜன் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம், கோவிட் தடுப்பூசி முகாம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த மருத்துவ முகாமில் 30 மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பின்னர் மேயர் பிரியா ராஜன் பேசியதாவது:
ஏற்கனவே கொளத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தற்போது மூன்றாவது இடமாக தரமணியில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த முகாம்கள் மீதமுள்ள அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்தார். இதில் துணை மேயர் மகேஷ்குமார், ஹசன் மவுலானா எம்எல்ஏ, துணை ஆணையாளர் மனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!